நியூயார்க் நகரம்
நியூயார்க் நகரம்
உறங்கும்
நேரம்..... அறையின் சன்னலை திறந்து வைத்தால்
மேலெழும்பி நிற்கும்
கட்டிடங்களும் வண்ண விளக்குகளுமாய் குழுமியிருந்தது.
அதிகாலையிலேயே எழுந்து
சுற்ற ஆரம்பித்தால் தான் பெரும்பாலான இடங்களை
சுற்றிப் பார்க்க வேண்டும்
என்பதால் காலையிலேயே எழுந்து குளித்து
முடித்து தயாராகி விட்டேன். முகுந்து
சுற்றிப் பார்க்க வர மறுத்ததால் இரவே
அருகிலுள்ள அறையிலுள்ள சுவாமியை
அழைத்தாகி விட்டது. காலையில்
9
மணிக்கெல்லாம் தயாராகி விட பணித்தும்
ஆகிவிட்டது.
நான் அடித்து பிடித்து காலையிலேயே
தயாராகி இருக்க அவனோ அப்போது தான் எழுந்திருந்தான்.
எனக்கோ இருக்கிற ஒரு
நாளில் நன்றாக சுற்றிப் பார்த்தாகி விட வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு வேறு.
என்ன பண்ணுவது வேகமாக செல்லலாம் என
வலியுறுத்தி
10
மணிக்கெல்லாம் அறையை
விட்டு வெளியே வந்திருந்தோம்.
அடிவயிற்றில்
பசி குடலைப் பிடுங்கியது. நம்மூராக
இருந்திருந்தால் எதாவதொரு கடையில் போய்
இட்லியோ,
தோசையோ விழுங்கிவிட்டு விறுவிறு வென
நடக்கலாம். அங்கே எங்கே போய்
சாப்பிடுவது என்ன சாப்பிடுவது என்ற பெரும்
குழப்பங்களுக்கிடையில்
அருகிலுள்ள கடையில் இரண்டு பன்னுகளை வாங்கி சாப்பிட்டோம். நம்மூரில்
கிடைக்கும் பன் என்று ஆசையாக சாப்பிட
ஆரம்பித்தால் அதில் ஏதோவொரு மணம்
உவ்வே என வைக்கிறது. இருந்தாலும் என்ன செய்ய
?
என்று சாப்பிட்டு விட்டுக்
கிளம்பினோம். நாங்கள் தங்கியிருந்த அறைக்கு
அருகில் தான் சுதந்திரதேவி
சிலைக்குச் செல்ல வேண்டிய இடம் இருப்பதால்
கால்நடையாகவே நடந்து செல்ல
ஆரம்பித்தோம்.
இனிமையான தென்றல் காற்று எங்களின் முகத்தில்
ஈரக்காற்றை அறையத் தவறவில்லை.. அக்குளிர் காற்றிலிருந்து
என்னைக் காக்க
ஜெர்கின் ஒன்றை அணிந்திருந்ததால் ஒரளவு உடல் வெதுவெதுப்பாய் இருந்தது.
போகின்ற வழியில் தீவிரவாதிகளால் வானூர்தி
விட்டு தாக்கப்பட்டு
தரைமயமாக்கப்பட்ட "Ground
Zero"
என தற்போது அழைக்கப்படும் உலக வர்த்தக
கட்டிடத்தின் கட்டிடப் பணிகள் நடந்து
கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஆறு
வருடங்களுக்கு முன் சிதைந்து போன சிமெண்ட்
துகள்களுக்குள் சிதறி விழுந்த
மனித உயிர்கள் மாண்ட இடங்கள் கண்டேன்.
பிரம்மாண்டமாய் காட்சி தரும்
அம்மாதிரியான இடங்களில் 110
மாடி கட்டிடம் தரைமட்டமாயிருந்தால் அவர்களின்
மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் உணர
முடிந்தது.
அப்பணி நடக்கும்
இடங்களிலும் ஆங்காங்கே சுற்றுலாத்தளம் போல்
சுற்றிப் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
செல்கின்ற
வழியில் ஆங்காங்கே புகைப்படம் எடுத்துக்
கொள்ளவும் தவறவில்லை. நானும்
சுவாமியும் மாற்றி மாற்றி வெவ்வேறு விதமான
கோணங்களில் எடுத்துக் கொள்ள
தவறவில்லை. உலக வர்த்தகக் கட்டிடத்தின்
முன்பாக இருந்த ஒரு இடத்தில்
அமைந்துள்ள குட்டிச் சுவற்றில் சைக்கிள் ஓட்டி
சாகசம் புரிந்த்தைப் பார்க்க
பரவசாமாயிருந்தது. அதன் அருகிலேயே ஒர் மனித
சிலை உட்கார்ந்த நிலையில்
பெட்டி ஒன்றை வைத்துக் கொண்டிருந்தது.
அதனருகில் உட்கார்ந்தும் போட்டோ
எடுத்துக் கொண்டோம்.
சிறிது
தொலைவில் உலக பொருளாதரத்தின் சிம்மாசனமாக
விளங்கும் வால் ஸ்டிரீட்
சென்றோம். பெரும் பண முதலைகளும்,
முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும்
குவிந்திருக்கும் அவ்விடம்
|