|
நாம்
உட்கொள்ளும் உணவு,
நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும்
முறை,
உடற்பயிற்சி,
பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை
ஆரோக்கியமாக
பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
பெரும்பாலான நோய்கள் உடலை
சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால்
ஏற்படுகிறது.
ஒட்டுண்ணிகள்
(பாராசைட்ஸ்),
புழுக்கள்
(வார்ம்ஸ்),
சொரி சிரங்கு
(ஸ்காபிஸ்),
புண்கள்
(சோர்ஸ்),
பற்சிதைவு
(டூத்
டிகே),
வயிற்றுப்போக்கு
(டையேரியா)
மற்றும் இரத்தபேதி (டிசென்டரி)
போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம்
சரியில்லாததினால்
ஏற்படுகிறது.
இவ்வகை நோய்கள் அனைத்தையும் உடலை சுத்தமாக,
சுகாதாரமாக
வைத்துக்கொள்ள பழகுவதின் மூலம் ஏற்படாமல்
தடுக்கலாம்.
தலையை
(சிரசு)
சுத்தம் செய்தல்
வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஷாம்பு அல்லது
சீக்காய் உபயோகப்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.
கண்,
காது மற்றும் மூக்கை சுத்தம் செய்தல்
சுத்தமான தண்ணீரை கொண்டு தினமும் கண்களை
(கழுவவேண்டும்)
சுத்தம் செய்ய வேண்டும்.
காதுகளில் குறும்பி
(வாக்ஸ்)
எனப்படும் பொருள் உருவாகி காற்று செல்லும்
வழியினை அடைக்கிறது.
இது வலியை ஏற்படுத்தும்.
எனவே காதுகளை பஞ்சு கொண்டு
வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம்
காய்வதினால் ஏற்படும் பொருள் மூக்கு
துவாரத்தை அடைத்துக் கொள்ளும்.
எனேவ தேவைப்படும் போதெல்லாம் மூக்கினை
சுத்தம் செய்ய வேண்டும்.
சிறுபிள்ளைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷம்
ஏற்படும்
போது மென்மையான துணியினைப் பயன்படுத்தி
மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.
வாயினை சுத்தம் செய்தல்
மென்மையான பல்பொடி மற்றும் பேஸ்ட் போன்றவை
பற்களை சுத்தம் செய்வதற்கு
உகந்தவைகள்.
தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு
உறங்கச் செல்லும் முன்
என இரண்டு வேலை பற்களை சுத்தம் செய்யவும்.
கரித்தூள்,
உப்பு,
கரட்டுத்தன்மை
கொண்ட பற்பொடி இதுபோன்ற பிற பொருட்களை கொண்டு
பற்களை சுத்தம் செய்யும்போது
பற்களின் வெளிப்படலத்தில் கீறல்கள்
ஏற்படுத்தும்.
எந்தவொரு உணவுபொருளையும் உட்கொண்ட பின்னர்
சுத்தமான தண்ணீரைக் கொண்டு
வாயினை கழுவவேண்டும்.
இவ்வாறு செய்வது,
உணவுப் பொருள் பற்களின் இடையில்
படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவது,
பல்ஈறுகளை கெடுப்பது மற்றும்
பல்சொத்தை
(அ)
பற்சிதைவு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.
சத்தான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள
வேண்டும்.
இனிப்புப் பொருட்கள்,
சாக்லேட்,
ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற உணவுகளை குறைந்த
அளவிலேயே உட்கொள்ள
வேண்டும்.
பற்சிதைவிற்கான அறிகுறிகள் காணும்போது
பல்மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசிக்க
வேண்டும்.
முறையாக மற்றும் சரியாக பல் துலக்கும் முறைகள்
பற்களில் கறை படிவதை தடுக்க உதவுகிறது.
பற்களை சுத்தம் செய்ய பல்மருத்துவரை அணுகவும்.
தோல் பராமரிப்பு
தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது.
இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மற்றும்
உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள
உதவுகிறது.
தோல் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை
வியர்வையாக வெளியேற்ற உதவுகிறது.
தோலில் குறைபாடு இருப்பின் வியர்வை சுரப்பிகள்
அடைபடுகிறது.
இதன் விளைவாக
புண்கள்
(சோர்ஸ்)
மற்றும் பருக்கள்
(அக்கி)
போன்றவைகள் ஏற்படுகின்றன.
தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும்
சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பினை கொண்டு
குளிக்க வேண்டும்.
கைகளைக் கழுவுதல்
உணவு உட்கொள்வது,
மலம் கழித்தபின் மலவாயினை சுத்தம் செய்வது,
மூக்கினை
சுத்தம் செய்வது,
மாட்டுச்சாணம் அள்ளுவது போன்ற எல்லா
செயல்களையும் நாம்
கைகளைக் கொண்டு செய்கிறோம்.
இதுபோன்று செய்யும் போது,
பல நோய்களை
ஏற்படுத்தும் கிருமிகள் நகங்களின் கீழ்
மற்றும் தோலின் மேற்பரப்பில்
தங்கியிருக்கும்.
இதுபோன்ற செயல்களுக்குப் பின்,
மிகமுக்கியமாக சமைப்பதற்கு
முன்,
கைகளை
(கை
மணிக்கட்டிற்கு மேல்,
விரல் இடுக்குகள் மற்றும்
நகச்சந்துகள்)
சோப்பு கொண்டு கழுவுவது,
பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து
நிறுத்த உதவுகிறது.
நகங்களை முறையாக வெட்ட வேண்டும்.
நகங்களை கடிப்பது மற்றும் மூக்கை நோண்டுதல்
போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பிள்ளைகள் மண்ணில் விளையாடுவர் எனவே உணவிற்கு
முன் கைகளைக் கழுவ கற்பிக்க வேண்டும்.
இரத்தம்,
மலம்,
சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவற்றை தொடுவதை
தவிர்க்கவும்.
மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம்
செய்தல்
மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் உறுப்புகளை
சுத்தமான நீரைக் கொண்டு
முன்னிருந்து பின்னாக சுத்தம் செய்தல்
வேண்டும்.
கைகளை சோப்பினை கொண்டு
கழுவ மறந்து விடக்கூடாது.
கழிவறை,
குளியலறை மற்றும் சுற்றுப்புறத்தை
துப்புரவாக வைத்துக் கொள்ளவும்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை
தவிர்க்கவும்.
இனப்பெருக்க உறுப்புகளின் தூய்மை
ஆண்கள்
மற்றும் பெண்கள் என இருபாலரும் தங்கள்
இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
பெண்கள் மாதவிடாய் நேரங்களில் அவசியம்
தூய்மையான,
மென்மையான துணியினைப்
பயன்படுத்த வேண்டும்.
துணியினை
(நாப்கின்ஸ்)
ஒரு நாளில் குறைந்தது இரண்டு
முறை மாற்ற வேண்டும்.
வெள்ளைப் போக்குடன்
(வெள்ளைப்படுதல்)
துர்நாற்றம் காணப்படும் பெண்கள் அவசியம்
மருத்துவரை அணுகவும்.
இனப்பெருக்க தடத்தில்
(உறுப்புகளில்)
நோய்தொற்றினை காணும்போது உடனடியாக மருத்துவரை
அணுகவும்.
பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறைகளை
(காண்டம்ஸ்)
பயன்படுத்தவும்.
இனப்பெருக்க உறுப்புகளை உடலுறவுக்கு முன்பும்
பின்பும் கழுவவும்
(சுத்தம்
செய்யவும்)
உணவு மற்றும் சமையலின் போது சுகாதாரம்
சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில்
சமைப்பதினால் உணவு மாசுபடுதல்,
உணவு நச்சுப்படுதல்,
மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து
நிறுத்தலாம்.
சமைக்கும் பகுதி மற்றும் சமையல் சாமான்களை
தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அழுகின மற்றும் கெட்டுப் போன உணவுகளை
உட்கொள்வதை தவிர்க்கவும்.
சமைப்பதற்கு முன்பு மற்றும் பரிமாறும் முன்பு
கைகளைக் கழுவ வேண்டும்.
காய்கரி போன்ற உணவுப் பொருட்களை சமைப்பதற்கு
முன் நன்கு கழுவவேண்டும்.
உணவுப் பொருட்களை சரியான முறையில் சேமித்து
வைக்க வேண்டும்.
உணவுப் பொருட்களை வாங்கும்முன் எந்த நாள்வரை
அந்த பொருளினைப்
பயன்படுத்தலாம் என்ற விவரத்தை பார்த்து
வாங்கவும்
(பெஸ்ட்
பிபோர் என்று
அட்டையில் குறிப்பிடப்படும் தேதி).
சமையலறைக் கழிவுகளை சரியான முறையில்
அப்புறப்படுத்தவும்.
மருத்துவ சுகாதாரம்
(அ)
நலன்
காயம் ஏற்பட்டால்,
சரியான சுத்தமான பேன்டேஜ்
/துணியினை
உபயோகித்துப் பராமரிக்க வேண்டும்.
மருந்துகளை வாங்கும் போது அம்மருந்து செயல்
இழக்கும் தேதி என்ன என்பதனை பார்த்து வாங்க
வேண்டும்.
தேவையற்ற மருந்துகளை பாதுகாப்பான முறையில்
அப்புறப்படுத்த வேண்டும்.
மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை
உட்கொள்ளக்கூடாது.
|