|

மலர்களும் மருந்தாகும்
இலுப்பைப் பூ
இலுப்பை பூவை
பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை
பருகி வந்தால் தாது விருத்தி
ஏற்படும். மேலும் தாகத்தையும் இது
விரட்டியடிக்கும்.
ஆவாரம் பூ
ரத்தத்துக்கு
மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை
ஒன்றுக்கு
15
கிராம் நீரில்
போட்டு கசாயமாக்கி பால்,
சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு,
நீரிழிவு,
நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை
உலர்த்தி கிழங்கு
மாவுடன் கூட்டி,
உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம்
நீங்கும். தோல்
வியாதிகளும் குணமாகும்.
அகத்திப்பூ
அகத்திப்பூவை
சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில்
காய்ச்சி சர்க்கரை சேர்த்து
தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல்
சூடு,
பித்த சூடு நீங்கும்.
நெல்லிப்பூ
உடலுக்கு
குளிர்ச்சி,
இதனுடன் விழுதி இலை,
வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து
இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது
உகந்தது.
மகிழம்பூ
மகிழம்பூவின் மணம் கண்நோய்,
தலைவலி,
தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.
தாழம்பூ
இந்தப் பூவை
தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு
எந்தக் கிருமிகளும் நெருங்காது.
இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு
வனப்பையும் அதிகரிக்கும்.
செம்பருத்திப்பூ
இருதய
பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு
வலியால் அவதிப்படுபவர்கள்
இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி
காலையும்,
மாலையும் குடித்து
வந்தால் இருதயம் பலமடையும்.
ரோஜாப்பூ
இந்த மலரின் மணம்
மனதிற்கு மட்டுமின்றி,
இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில்
ரோஜா
இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த
விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.
வேப்பம்பூ
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில்
இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும்.
உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.
முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம்
செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள
கிருமியை ஒழிக்க கூடியது.
மல்லிகைப்பூ
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு
உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு.
கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
கருஞ்செம்பை பூ
இந்தப்
பூவையும்,
நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து
குளித்து வந்தால்
தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம்,
தலை வலி,
கழுத்து
நரம்புவலி போன்றவையும் நீங்கும்.
குங்குமப்பூ
கர்ப்பமாக
இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு
5
முதல்
10
இதழ்களை இரவு பசும் பாலில்
போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான
நோய்கள் நீங்கும். பிறக்கின்ற
குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும்
குங்குமப்பூ உபயோகப்படுகிறது
|