|

கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்!
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
புரதச் சத்து,
மாவுச் சத்து,
கால்சியம்,
பாஸ்பரஸ்,
இரும்பு உள்ளிட்ட தாதுப்
பொருள்கள்,
வைட்டமின் சி,
அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள்,
நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத்
தேவைப்படும் அனைத்துச் சத்துகளும்
தேங்காயில் உள்ளன.
தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு
பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
தேங்காய்ப் பால் உடல் வன்மைக்கு நல்லது.
தேங்காய் எண்ணெய் சித்த
மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில்
சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்
தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு
தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல்,
படை,
சிரங்கு போன்ற நோய்களுக்குத்
தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு
தேங்காய் எண்ணெய்
சேர்க்கப்படுகிறது.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக
உதிரப்போக்குக்கு,
தென்னை மரத்தின்
வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல
மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம்
பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய்
எண்ணெய் தயாரிக்கும்போது
கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும்
சேர்த்து தோல் நோய்களுக்கான
மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய்
சிரட்டையில் (வெளிப்புற ஓடு)
இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல்
வியாதிகளைக்
குணப்படுத்துகிறது.
மூல முளை,
ரத்த மூலம் போன்றவற்றுக்கு
தென்னங்குருத்திலிருந்து மருந்து
தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு
முறிவாகப்
பயன்படுத்தப்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு,
பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத்
தேங்காய்ப் பால் சிறந்த நஞ்சு முறிவு.
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும்
தைலங்கள்
பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
தைலங்கள்;
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும்
தைலங்கள் பல்வேறு
நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத
புண்களுக்கு மருந்தாகத்
தரப்படும் மத்தம் தைலம்,
தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம்,
வாத வலிகளைக்
குணப்படுத்தும் கற்பூராதி தைலம்,
தலைக்குப் பயன்படுத்தப்படும்
நீலபிரிங்காதித் தைலம்,
சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத்
தைலம்,
தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும்
பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில்
தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
எளிதில் ஜீரணமாகும்: தேங்காய் எண்ணெய் எளிதில்
ஜீரணமாகும்.
குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும்
தேங்காய்ப் பாலில் உள்ளன.
தேங்காய் பாலில் கசகச,
பால்,
தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல்
மட்டுப்படும்.
பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர்
கோர்த்தல்) இளநீர் கொடுத்தால்
சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில்
கலந்து கொடுத்தால் வயிற்றில்
உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
வயிற்றுப் புண்கள்: தேங்காய்ப் பாலில்
காரத்தன்மை உள்ளதால்,
அதிக அமிலம்
காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு (Ulcer)
தேங்காய்ப் பால் மிகவும்
சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள்
உள்ளன. இவை உடலின்
வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும்
உதவுகிறது.
தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில்
சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக்
குறைப்பது எப்படி?
மீடியம் செயின் ஃபேட்டி ஆசிட் (Medium
Chain Fatty Acid)
தேங்காயில்
அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச்
சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட்
(Capric Acid)மற்றும்
லாரிக் ஆசிட் (Lauric
Acid)
ஆகிய இரண்டு அமிலங்களும்
தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய்
எண்ணெய் உரிய அளவு தினமும்
உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும்
என்று அண்மைக்கால ஆய்வுகள்
மூலம் தெரியவந்துள்ளன.
வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக்
ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட்
ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல்
நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன்
கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின்
(Mono
Laurin)
வைரஸ் செல்
சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு
வைரல் லோடைக் குறைக்கிறது.
தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.
உடலின் வளர்ச்சிதை
மாற்றத்துக்கு (Metabolism)பெரிதும்
உதவுகிறது. இதன் மூலம் சக்தியை
அதிகப்படுத்துகிறது.
ஆண்மைப் பெருக்கி: முற்றிய தேங்காய் ஆண்மைப்
பெருக்கியாகப் பயன்படுகிறது.
அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத்
தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின்
செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக... குழந்தைகள் நல்ல
நிறமாக பிறக்கவேண்டும்
என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம்.
அதுபோல் குழந்தை நல்ல
நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி
கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும்
வழக்கமும் உள்ளது.
இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம்
இளநீர். சுத்தமான சுவையான பானம்.
இளநீரில்,
செவ்விளநீர்,
பச்சை இளநீர்,
ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என
பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா
வகையிலும் மருத்துவக் குணங்கள்
நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம்,
பித்தம்,
கபத்தைத் தீர்க்கும்
மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும்.
உடலில் நீர்ச் சத்து குறையும்
நிலையில் அதைச் சரி செய்யும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை
சுத்திகரிக்கும். விந்துவை
அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும்.
ஜீரணக் கோளாறால் அவதிப்படும்
குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில்
ஏற்படும் நீர் - உப்புப்
பற்றாக்குறையை (Electoral
Imbalance)
இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின்
உப்புத் தன்மை
வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா
நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த
கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர
நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை
சிரை (Vein)
மூலம் செலுத்தலாம்.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள
பிளாஸ்மாவுக்கு சிறந்த
மாற்றுப் பொருளாக இளநீர்
பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள
நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது.
இளநீரிலிருந்து
தயாரிக்கப்படும் "ஜெல்'
என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த
மருந்து.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
சர்க்கரைச் சத்துடன் தாதுப்
பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம்,
சோடியம்,
கால்சியம்,
பாஸ்பரஸ்,
இரும்பு,
செம்பு,
கந்தகம்,
குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
இளநீரில் உள்ள புரதச்சத்து,
தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
ஏனெனில் அதில் உள்ள அமிலத்
தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது
ஆகாரம் எடுத்த பின்னரே
சாப்பிடவேண்டும்.
|