|
மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து
வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப்
பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டுமருந்துக்
கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த்தொற்று
மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த
மருந்து.
உமிழ்நீர்ப் பெருக்குதல், பட்ட இடத்தில்
எரிச்சலூட்டுதல், நாடி நடையை மிகுத்து வெப்ப
மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது.
1. ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம்
மென்று விழுங்க பல்வலி, அண்ணாக்குத் தூறு
அழற்சி, தொண்டைக் கம்மல், நாக்கு
அசைக்கமுடியாமை, நீர்வேட்கை ஆகியவை தீரும்.
2. உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச
வலிப்பினால் ஏற்பட்ட நரம்புப் பிடிப்பு
தீரும்.
3. 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர்
நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி
வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து
வர பல்வலி நீங்கிப் பல்லாட்டம் குறையும். வாய்
தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் -ஆறும். |