|
கொடிய நோய்களுக்கு ஸ்டெம்செல் தொழில்நுட்பம்
மூலம் தீர்வு
கொடிய
வியாதிகளில் ஒன்று புற்றுநோய். எய்ட்சைப்
போலவே இதன் பாதிப்புகளும்
பயங்கரமாக இருக்கும். புற்று நோய்கள் உடலின்
பல்வேறு பாகங்களையும்
பாதிக்கக்கூடியது. வாய்,
நுரையீரல்,
குடல்,
ரத்தத்தட்டுகள்,
மூளை என
முக்கியமான உறுப்புகளை பாதித்து
முடக்குவதால் நோய்வாய்ப்படுபவர்களுக்கு மரண
வேதனையாக இருக்கும்.
இவற்றில் ரத்தப் புற்றுநோய் சில வகைப்படும்.
அனீமியா,
லூக் கேமியா,
தலசீமியா போன்றவை குறிப்பிடத்தக்க
ரத்தப்புற்று நோய்களாகும்.
மருத்துவ
உலகில் ஸ்டெம்செல் முறை கண்டுபிடிக்கப்பட்ட
பிறகு பல்வேறு வியாதிகளுக்கு
தீர்வு காணப்பட்டு உள்ளது. அந்த வரிசையில்
ரத்தப்புற்று நோய்களான அனீமியா,
தலசீமியா போன்றவற்றுக்கும் முடிவு கட்டலாம்
என்று சமீபத்தில்
கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த
ரிக்கன் இன்ஸ்டிடிïட்
ஆய்வுக்குழு
இதை கண்டுபிடித்து உள்ளது.
அனீமியா
என்பது ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறைவால்
ஏற்படுவதாகும். தலசீமியா
என்பது ரத்தத்துக்கு போதுமான அளவு
ஹீமோகுளோபின் கிடைக்காததால்
ஏற்படுவதாகும். (ஹீமோகுளோபின் எனப்படுவது
ரத்தத்துக்கு சிவப்பு
நிறமளிக்கும் நிறமியாகும்.)
அடல்ட் (Adult) (அ)
ப்ளுரி பொடன்ட் ஸ்டெம்செல் எலும்பு மஞ்ஞையில்
(Bone Marrow)
காணப்படும் ஸ்டெம் செல்களை நோயாளிகளின்
எலும்பிலிருந்தும் அல்லது
இரத்தத்திலிருந்தும் பிரித்து எடுத்தபின் அவை
சுத்தப்படுத்தும்
'எண்டோடாக்சின்
டெஸ்ட்'
(Endotaxin Test)
முறை மூலம் பாக்ட்ரியாக்கள் இல்லாமல்
சுத்தப்படுத்தப்படும். குறைந்தது மூன்று
மணிநேரம்
50
மி.லி. அளவு இரத்தம்
சுத்தப்படுத்தத் தேவைப்படும். இருதய சம்பந்த
நோய்களான அட்வான்ஸ்டு காரனரி
ஆர்டரி,
இருதய தசை தொய்வு,
மாரடைப்பு இருதய வால்வு குறைபாடு போன்றவற்றைக்
குணப்படுத்த ஊசி மூலம் நேரடியாக ஸ்டெம்
செல்கள் செலுத்தப்படுகிறது. மேலும்,
மூளையில் அடிப்பட்டு சேதமடையும் பாகங்களைச்
சரி செய்யவும்,
முதுகுத் தண்டு
வட (Spinal Cord)
அடிகளுக்கும் தண்டு வடத்தை சுற்றி ஸ்டெம்
செல்கள்
செலுத்தப்படுகின்றன.
|