|
இயற்கையோடு இணைந்த ஆயுர்வேத சிகிச்சை
ஆயுர்வேத மருத்துவம் என்பது காலங்காலமாக
கடைபிடிக்கப்படும் பரம்பரை இயற்கை
மருத்துமாகும்.
சென்னையைப்
பொருத்தவரை தற்போது ஆயுர்வேத மருத்துவ
சிகிச்சை குறித்த விழிப்புணர்வு
ஏற்பட்டு,
ஆயிரக்கணக்கானோர் இந்த சிகிச்சையை நோக்கி
வந்து கொண்டுள்ளனர்.
ஆயுர்வேத
மருத்துவமனைகள்,
சிகிச்சை மையங்கள் என தரமான முறையில்
உருவெடுத்துள்ளன.
எளிய,
செலவு குறைந்த,
பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை என்பதாலும்,
மருந்துகளும் அங்கேயே வழங்கப்படுவதாலும் பொது
மக்களிடையே ஆயுர்வேதத்திற்கு
சமீபகாலமாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நீண்டகால
மூட்டு வலி,
மூட்டு வீக்கம்,
தேய்மானம்,
கழுத்து வலி,
முதுகெலும்பு வலி,
தோல் நோய்,
பக்கவாதம்,
உயர் ரத்த அழுத்த நோய்,
சர்க்கரை நோய்,
தலைவலி,
சைனுசைட்டீஸ்,
ஆஸ்துமா,
தூக்கமின்மை போன்ற பிரச்னைகளுக்கு
ஆயுர்வேதத்தில்
முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
கேரளாவின்
கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலை இந்த
சிகிச்சையில் முக்கியப் பங்காற்றுகிறது.
சென்னையில் டாக்டர் பி. ஜி. கே. உன்னித்தன்
தலைமையில் பிரகிருதி ஆயுர்வேத
மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
இம்மருத்துவமனை
அண்ணாநகர்,
ராஜா அண்ணாமலைபுரம்,
சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் செயல்பட்டு
அன்றாடம் வரும் நூற்றுக்கணக்கானோருக்கு
நிவாரணம் அளித்து வருகின்றன.
|