Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்

     அதிசயங்கள்  

  ஆயுள்வேதம்

 

 

காய்ச்சலுக்குப் பிறகு..!   ஆயுர்வேதம்

 

காய்ச்​சல் விட்ட பிறகு,உட​லுக்​குப் புஷ்டி தரும் உணவு சாப்​பி​ட​லாம் என்ற ஆசை​யால், வாழைப் பழம், பலாப் பழம், மாம்​ப​ழம் பால், நெய் நல்ல கறி​காய்​கள் போன்​ற​வற்றை அள​வுக்கு மீறி உண்டு, அத​னால் பசி மந்​தம் ஏற்​பட்டு வயிறு உப்​பிக் கனத்​துத் திண​றும் உங்​க​ளுக்​குத் தேரை​யர் எனும் முனி​வர் கூறும் அறி​வுரை என்ன தெரி​யுமா?துவ​ரம் பருப்பை வேக வைத்து வடி​கட்​டிய நீரில் மிள​கும் பூண்​டும் ரசத்​திற்​குத் தேவை​யான ரசப்​பொ​டி​யும் சேர்த்​துக் காய்ச்சி ரச​மாக்​கிச் சாப்​பிட அந்​தப் பசி மந்​த​மும், வயிறு வேத​னை​யும் நீங்கி விடும் என்​கி​றார்.

புர​ தச் சத்​து​மிக்க உண​வு​க​ளில் பருப்​பு​க​ளுக்கு முதல் இட​முண்டு. அதி​லும் துவ​ரம் பருப்​பிற்கு நம்​நாட்டு உண​வில் அதிக முக்​கி​யத்​து​வம் தரப்​ப​டு​கின்​றது. விருந்​தி​லும்,பத்​திய உண​வி​லும் இது நிச்​ச​யம் இடம் பெறும். விருந்​தில் பருப்பு சாம்​பார், பருப்பு உசிலி,பருப்பு போளி, பருப்​புப் புட்டு என்ற​வா​றும் பத்​திய உண​வில் பருப்​புப் பொடி, பருப்​புத் துவை​யல், பருப்பு ரசம் என்ற வகை​யி​லும் துவ​ரம் பருப்பு பயன்​ப​டு​கி​றது.

கடும் காய்ச்​சல், மூட்டு வலி முத​லிய உபா​தை​க​ளால் பல​நாட்​கள் தொடர்ந்து படுக்​கை​யி​லேயே கிடந்து எழுந்​தி​ருக்​கக் கூடச் சக்​தி​யில்​லா​மல் இருக்​கும் உங்​க​ளுக்கு ஒரு சிறந்த கஞ்​சி​முறை இருக்​கி​றது.பஞ்ச முஷ்​டிக யூஷம் என்று அதற்​குப் பெயர். பஞ்ச என்​றால் ஐந்து. முஷ்​டிக என்​றால் ஒரு கைப்​பிடி அளவு. யூஷம் என்​றால் கஞ்சி. துவரை, உளுந்து, கொண்​டைக் கடலை, பச்​சைப் ​ பயறு மற்​றும் பச்​ச​ரிசி ஆகிய ஐந்​தை​யும் வகைக்கு ஒரு கைப்​பி​டி​ய​ளவு எடுத்​துத் தனித் தனியே நல்ல வெள்​ளைத் துணி​யில் முடிந்து ஒரு பாத்​தி​ரத்​தில் போட்டு அதில் சுத்​த​மான தண்​ணீர் 3 லிட்​டர் விட்டு,அரை லிட்​டர் ஆ​கும் வரை காய்ச்சி,அந்​தத் துணி முடிச்​சு​களை அகற்றி, தண்​ணீரை மட்​டும் வெது​வெ​துப்​பா​கச் சாப்​பி​டு​வ​தால் பசி​யின் களைப்பு,பலக்​கு​றைவு இவற்றை எளி​தில் சமா​ளிக்​க​லாம். நீடித்த உப​வா​சங்​க​ளுக்​குப் பின் கனத்த உணவு ஏற்க முடி​யாத நிலை​யி​லும்,உப்​பில்​லாப் பத்​திய நிலை​யி​லும் இந்​தக் கஞ்சி குடிப்​பது மிக​வும் நல்​லது. இயற்​கை​யான புர​தச் சத்​து​மிக்க உண​வாக இது ஏற்​றுக் கொள்​ளத்​தக்​கது.

பருப்பு வகை அதி​க​மா​கச் சேர்ந்​தி​ருந்​தா​லும் வெந்த பருப்​பு​க​ளின் திரவம் மட்​டுமே சேர்​வ​தால் குட​லில் வாயு கொள்​வ​தில்லை. இந்​தக் கஞ்சி சிறிது துவர்ப்​பும் இனிப்​பு​மாக இருக்​கக் கூடி​யது.மலத்தை இளக்​கா​மல் கட்​டும். பித்த கப நோய்​க​ளுக்கு மிக​வும் ஏற்​றது.நல்ல ரத்த விருத்தி தரும். தோலின் மென்​மை​யும் பள​ப​ளப்​பும் பூச்​சும் இத​னால் அதி​க​மா​கும்.

நீங்கள் புலால் உணவு வகை​க​ளைச் சாப்​பிட வேண்​டிய கட்​டா​யம் ஏது​மில்லை. மேற்​கு​றிப்​பிட்ட பருப்பு வகை​க​ளைத் தனியே வேக வைத்து,தண்​ணீர் சுண்​டி​ய​தும், அப்​ப​டியே பருப்​பைச் சுண்​டல் போலச் சாப்​பி​டு​வது, கறி​காய்​களை வேக வைத்து அத்​து​டன் கலந்து சமைத்து உண்​பது என்ற வகை​யில் தின​மும் உண​வில் 5-15 சத​வி​கி​தம் வரை பருப்​பு​களை நாம் உண​வில் சேர்க்க முடி​யும். புலால் உண்​ணா​த​வர்​க​ளுக்​கும் புலால் உண​வி​னால் ஏற்​ப​டும் புஷ்​டிக்கு நிக​ரான புஷ்​டியை பருப்​பில் பெற முடி​யும். ஆனா​லும் அள​விற்கு மீறிய பருப்​பைச் சேர்த்​துக் கொள்​ளும்​போது அதைச் செரிக்​கத் தேவை​யான தாப​மா​னம் இல்​லாம​லி​ருந்​தால் ஜீர​ண​மா​கத் தாம​த​மும், அந்​தத் தாமத்​தால் ஏற்​ப​டும் நுத​நு​தப்​பி​னால் குட​லி​லுள்ள பருப்​பில் அழு​கல் ஏற்​பட்டு, அந்த அழு​கிப் போன பருப்பி​லி​ருந்து வாயு உண்​டா​கி​றது. அந்த வாயுவே வயிற்று உப்​புசத்​திற்​குக் கார​ண​மா​க​லாம்.அத​னால் தாப​மா​னம் உங்​க​ளுக்கு மிக​வும் முக்​கி​யம் என்​ப​தால், கோரைக் கிழங்கு 10 கிராம், பர்ப்​பா​ட​கப்​புல் 5 கிராம் வீதம் 1 லிட்​டர் தண்​ணீ​ரில் போட்டு அரை லிட்​டர் ஆகும் வரை காய்ச்சி, வடி​கட்டி, சிறிது சிறி​தாக ஒரு நாளில் குடித்து வந்​தால்,காய்ச்​சல் விரை​வில் விடு​வ​தோடு, குட​லில் தேவை​யான சூட்​டை​யும் பாது​காக்​கும். இந்​தக் குடல் சூடு​தான் தாப​மா​னம்.பருப்பு வகை​கள் சரியே ஜீர​ண​மா​னா​லும் பின் நிலை​க​ளில் உண​வுச் சத்து ரத்​தத்​து​டன் சேர்ந்​த​தும் கல்​லீ​ர​லும் சிறு​நீ​ர​கங்​க​ளும் அதி​கம் உழைக்க நேரி​டு​வ​தால், பருப்​பு​களை அள​வு​டன் சேர்த்து உண்​பதே நல்​லது பசி நன்​றாக எடுக்​கத் தொடங்​கி​விட்​டால் நீங்​க​ளும் வீட்​டி​லுள்ள மற்​ற​வர்​க​ளைப் போல் சாதா​ரண தினப்​படி சாப்​பி​டும் உண​வு​களை சாப்​பி​டத் தொடங்​க​லாம்.

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved