Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

 அதிசயங்கள்

           

பெண் - குழந்தை

 

 உலகிற்கு  மட்டுமல்லாது, உலகினரையும்  ஒரு  சவாலான புதிரில் ஆழ்த்தியுள்ளது.

 ஒரு நாள் பெரு நாட்டில்  தங்கள் ஐந்து வயது பெண்  குழந்தைக்கு வயிற்றில் மிக பெரிய கட்டி இருப்பதாய் கூறி அழைத்து வந்தனர் பெற்றோர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்  லோசடா அதிர்ந்தே போனார். கட்டியாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்ட  அந்த சிறுமியை பரிசோதித்து பார்த்த பொழுது அது கட்டி இல்லை, குழந்தை என்ற விடயத்தை கூறினார் மருத்துவர் லோசடா.  எட்டு மாத கரு முழுமையாக வளர்ந்துள்ளதையும் உறுதி படுத்தியதும் அச்சிறுமியின் பெற்றோர்  அதிர்ந்து போனார்கள்.

 ஐந்து வயதில்  பூபெய்துவதே வாய்ப்பில்லாத நிலை.. இந்த நிலையில் கரு சுமப்பது என்பது எப்படிச்சாத்தியமென்பது பெற்றோருக்கும் மருத்துவருக்கும் மிகப்பெரிய  புதிராக  இருந்தது. இச்சிறுமியின்   கருவிற்கு என்ன காரணமென்பது இன்றுவரை கண்டறியப்படவில்லை..

 மருத்துவர் லோசடா சிறுமி லினாவை பெருவின்  தலை நகரமான  லிமாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு மேலும் பல மருத்துவ சோதனைகளுக்கு பிறகு சுமார் ஆறு வார காலம் மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்தாள்.  லினாவிற்கு மே மாதம் பதினான்காம் நாளன்று , 1937 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் அழகிய ஆண் மகவு பிறந்தது.. லினாவிற்கு பிறந்த  குழந்தையின் 2.7 கிலோ எடையுடன் இருந்தது. பிரசவம் பார்த்த மருத்துவர் லோசடா குழந்தைக்கு கேரர்டோ  என பெயரிட்டார். மருத்துவர் கொர்லேட்டபசுல்லியு ஆகியோர்  இந்த அறுவை சிகிச்சையை செய்தனர். 

 சிறுவன் கேரர்டோ வளரும் பொழுது லினாவை தன சகோதரி என்றே நம்பி வளர்ந்தான். சராசரி சிறுவனாக வளர்ந்த கேரடோ தனது  நாற்பத்தி ஒன்பதாம் வயதில்  எலும்புருக்கி நோயால் இறந்து போனார். 

  லினா மேடினவின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது பெரிய புதிராகவே இருந்த போதிலும்லினாவின் தந்தை கைது செய்யபட்டார். போதுமான ஆதாரம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். லினாவிர்க்கு விபரம் எதுவும் சொல்ல தெரியவில்லை.  கேரர்டோ பதினோரு மாதமாக இருந்த பொழுது  லினா அவரது மருத்துவர் லோசட ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மட்டுமே தெளிவாக உள்ளது.. என்றாலும் லினா  எட்டு மாத கர்ப்பமாக இருந்த பொழுது எடுக்கப்பட்ட படம் மருத்துவ உலகின் ஆராய்ச்சியில் உள்ளது...

 லினாவின் பிரசவம் குறித்த மருத்துவர் எட்முண்டோ ஈஸ்கோமல் பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.  அதில் சிறுமி லினா சில மாதத்திலேயே  பூபெய்திவிட்டதாகவும், நாலுவயதிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி அடைந்து, ஐந்து வயதிலேயே இடுப்பு எலும்புமும் போதுமான வளர்ச்சியோடு இருந்ததாகக் கூறும் அவர், மேலும் கூறியது நாலு வயதிலேயே மார்பகங்களும் வளர்ந்து இருந்ததாம்.

 மீண்டும் பின்னாளில் திருமணம் செய்து கொண்ட லினா 1972 ஆண்டு மீண்டும் ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தார்..     இந்த சிறுமிதான் உலகின் இன்று வரை   உலகின் சிறுவயது தாய் என்று கின்னஸ்  சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மருத்துவ அதிசயங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

 

 

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved