|

தாய்பாலின் அதிசயங்கள்.
தாய்ப்பாலிலுள்ள
ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய்
செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என,
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில்
நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக
ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த
போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான்,
ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ
ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித
உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது
இதுவரை கண்டறியப்படவில்லை.
சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை
மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின்
ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த
ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய்
செல்களை அழிக்கிறது என்பது
கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது,
சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை
நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன்
புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில்
வெளியேறியது கண்டறியப்பட்டது.
இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில்
முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள்
கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை
மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை
பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை
அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து
வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும்
தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத்
தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர்
செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய
வந்துள்ளது.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும்
வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும்
ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி
தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு
தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத்
தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள்
குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க
ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே
பல்வேறு காரணங்களைக் காட்டி
நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும்
தவறானதாகும்.
ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில்
குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால்
குடித்து வளரும் குழந்தைகள்
மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80%
குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும்
குழந்தைகள் அதிக எடையுடன் வளரும்
ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின்
தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது.
குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை
அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில்
வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால்
உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல்
ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள்
நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.
குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும்
நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு
ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே
கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய்
தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.
தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச்
சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது.
வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும்
தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு
தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.
வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை
பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை
நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள்
வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும்
இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத்
தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி
அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.
தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத்
தேவையான அனைத்து விதமான சத்துகளும்
அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து
விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி
விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள்
குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில்
அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக
அவசியம்.
ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால
சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய
ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால்
குடித்து வளரும் குழந்தைகள் அறிவு
வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய
மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய
குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும்.
குறிப்பாக கணிதவியல், பொது அறிவு,
நினைவாற்றல், துல்லியமான பார்வை
போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.
SIDS (Sudden Infant Death Syndrome)
எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து
குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி
தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது
குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல
வகைகளில் பயனளிக்கிறது.
குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின்
எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும்
பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ்
எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும்
வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது.
பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம்
முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள்
விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு
பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள்
இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய
நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை
நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும்
காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை
நீட்டித்து வைக்கும் வல்லமையும்
பாலூட்டுதலுக்கு உண்டு.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய்,
கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள்
பெருமளவு குறைகின்றன. தாய்க்கும்
குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல்
ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால்
பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு
மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின்
மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் !
தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின்
முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப்
பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள்
வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ்,
பாக்டீரியா தாக்குதலிலிருந்து
காப்பாற்றுகிறது.
மழலைக்காலங்களில் வரும் இத்தகைய
தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள்
நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய
செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும்
எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின்
பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும்
இருக்கிறது. இது ஆபத்தானது என்கின்றனர்
மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில்
செரிமானமாவதில்லை என அவர்கள்
குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால்
பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம்
என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட
தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய
பால் பொருட்களை பயன்படுத்த
வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற
பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை
அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு
சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள்
ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக
கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா
லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன்
சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில்,
ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை
கண்டறியப்படவில்லை.
சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை
மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின்
ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த
ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய்
செல்களை அழிக்கிறது என்பது
கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது,
சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட
சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை
நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன்
புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில்
வெளியேறியது கண்டறியப்பட்டது.
இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில்
முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள்
கருதுகின்றனர். ஹேம்லெட் புற்றுநோய் செல்களை
மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை
பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை
அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து
வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும்
தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத்
தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர்
செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய
வந்துள்ளது.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும்
வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும்
ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி
தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு
தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத்
தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள்
குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க
ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே
பல்வேறு காரணங்களைக் காட்டி
நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும்
தவறானதாகும்.
ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில்
குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால்
குடித்து வளரும் குழந்தைகள்
மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80%
குறைகிறது. தாய்ப்பால் குடித்து வளரும்
குழந்தைகள் அதிக எடையுடன் வளரும்
ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின்
தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது.
குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை
அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில்
வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால்
உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல்
ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள்
நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன.
குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும்
நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு
ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே
கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய்
தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி.
தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச்
சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது.
வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும்
தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு
தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை.
வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை
பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை
நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது.
தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள்
வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும்
இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத்
தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி
அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம்.
தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத்
தேவையான அனைத்து விதமான சத்துகளும்
அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து
விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி
விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள்
குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில்
அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக
அவசியம்.
ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால
சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய
ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால்
குடித்து வளரும் குழந்தைகள் அறிவு
வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய
மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய
குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும்.
குறிப்பாக கணிதவியல், பொது அறிவு,
நினைவாற்றல், துல்லியமான பார்வை
போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது.
SIDS (Sudden Infant Death Syndrome)
எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து
குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி
தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது
குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல
வகைகளில் பயனளிக்கிறது.
குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின்
எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும்
பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ்
எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும்
வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது.
பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம்
முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள்
விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு
பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள்
இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய
நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை
நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும்
காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை
நீட்டித்து வைக்கும் வல்லமையும்
பாலூட்டுதலுக்கு உண்டு.
பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய்,
கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள்
பெருமளவு குறைகின்றன. தாய்க்கும்
குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல்
ஆழப்படுத்துகின்றது. பிறந்த உடன் குழந்தைகளால்
பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு
மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின்
மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் !
தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின்
முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப்
பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள்
வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ்,
பாக்டீரியா தாக்குதலிலிருந்து
காப்பாற்றுகிறது.
மழலைக்காலங்களில் வரும் இத்தகைய
தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள்
நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய
செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும்
எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது.
Home
|