|
சோரம் போனாயே சொக்கத் தமிழா!

செம்மொழிதான் நம்மொழி !
எம்மொழியும் இதற்கிணையில்லை !
இம்மொழியால் நீசிறக்க
எவ்வழியும் கண்டதில்லை !
“சும்மா”
இருக்கும் சுகமே
சுகம் என்று தூங்குகின்றாய் !
சோதரனின் சாயம்தான் உன்னைச்
சுட்டெரிக்காமல் விட்டு விடுமா
?
ஆதரிக்க அனைத்துலகம்
காதலித்துக் காத்திருக்க
பேதை அண்ணா பெரியவரே (நீவிர்)
வேதனைத் தீர்க்க விரையவில்லை !
வீரமில்லை
விவேகமில்லை
ஈரமில்லை
எழுச்சியுமில்லை !
நேரமில்லை நினைத்தழுதிட !
தி.மா.சேஷாசலம்.
பொறியாளர்
Home
|