|

கவிதைகளின்
கவிதை
அந்தி
நேர மஞ்சள் வானம்
தனித்திருக்கும் நிழல்
செடியில் பூத்த ஒற்றை ரோஜா
தொலைந்து
போன காடு
குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு
சாம்பல் நிறமான இரவு
பவுர்ணமி
நிலவில் கடலலைகள்
நியாயம் தவறிய தண்டனைகள்
கூண்டுக்குள்
சிறகடிக்கும் காதல் பறவைகள்
கடவுளும் சைத்தானும்
உனக்கான என் பிரியம்
ஆசையைத்
தொலைத்தவனா புத்தன்
நீ விட்டுச் சென்ற கைக்குட்டை
அர்த்தஜாம மோகினி
அறையில்
மீதமிருக்கும் உன் வாசம்
இரண்டு தலைகளையுடைய பூனை
உதட்டோரச்
சிரிப்பு
படமெடுக்கும் சர்ப்பம்
வில்லென உயரும் புருவங்கள்
அர்ஜுனனின்
காண்டீபம்
முதல் முத்தம்
மரணத்தை முழுதாய் உணர்ந்தவன்
அபாய
வளைவுகள்
எனக்கான ஒரு நதி
தியேட்டர் பொழுதுகள்
சொல்லவொண்ணா
சூன்யம்
மறக்கவியலா அந்த இரவு
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை
கருணையின்
கண்கள்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
நான்கும் ஒன்றான கால்கள்
ததும்பும்
மதுக்கோப்பைகள்
நான் உன்னை மறப்பதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை
கொலையும்
தற்கொலையும்
மட்டுமே
நினைவில் கொண்ட
கனவுகளில்
தொலைந்து போனவனின்
கவிதை இதுவென கொள்
|