|

முட்டாளை மணந்த இளவரசி
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்.
அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள்
மிகுந்த அறிவுடையவளாக விளங்கினாள்.
யார் பேசினாலும் தன் அறிவு கூர்மையால் அவர்களை மடக்கி விடுவாள்
அவள்.
இளவரசி திருமணப் பருவம் அடைந்தாள். தன்
மகளுக்கு யாரைத் திருமணம் செய்து வைப்பது
என்று சிந்தித்தான் அரசன்.
தந்தையே! இளவரசனாக இருந்தாலும் சரி,
ஏழைப் பிச்சைக்காரனாக இருந்தாலும்
சரி. பேச்சாற்றலில் யார் என்னை வெற்றி கொள்கின்றாரோ அவரையே
மணப்பேன்
என்றாள் அவள்.
இந்தச் செய்தி பல நாடுகளுக்கும்
தெரிவிக்கப்பட்டது.
பல நாட்டு இளவரசர்களும் அறிஞர்களும்
போட்டியில் கலந்து கொள்ள
அரண்மனைக்கு வந்தனர். வந்த ஒவ்வொருவரையும்,
சிறிது நேரத்திற்குள்
தோற்கடித்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தாள் இளவரசி.
நாள் தோறும் ஏராளமான கூட்டம் அரண்மனைக்கு வந்த
வண்ணம் இருந்தது.
இப்படியே சென்றால் நாட்டில் உள்ள எல்லோருடனும்
இளவரசி பேச வேண்டி
இருக்கும். வருகின்ற கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
பொழுது
போக்குவதற்காக இங்கு வருபவர்களை எப்படித் தடை
செய்வது என்று குழம்பினான்
அரசன்.
போட்டியில் வென்றால் திருமணம்,
தோற்றால் நூறு கசையடி,
என்று நாடெங்கும்
முரசறைந்து தெரிவிக்கச் சொன்னான் அவன். இதனால்
இளவரசியுடன் போட்டியிட
வருகின்றவர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. வந்தவர்களும்
தோற்றுக் கசையடி
வாங்கிக் கொண்டு சென்றனர். அந்த நாட்டில்
பிச்சைக்கார இளைஞன் ஒருவன்
இருந்தான். இளவரசியை மணப்பதற்காக நிகழும்
போட்டியைப் பற்றி அறிந்தான் அவன்.
முயற்சி செய்து பார்ப்போம். நல்ல வாய்ப்பு இருந்தால் இளவரசியை
மணப்போம்.
இல்லையேல் கசையடி வாங்கி இறந்து விடுவோம்
என்று நினைத்தான் அவன்.
தன் ஊரில் இருந்து தலைநகரத்தை நோக்கி நடக்கத்
தொடங்கினான் அவன்.
நீண்ட தூரம் நடந்தான் அவன். இறந்து போன கோழி
ஒன்று வழியில் கிடந்தது.
இது எதற்காவது பயன்படும் என்று நினைத்தான் அவன்,
தன் தோளில் கிடந்த
சாக்குப் பைக்குள் அந்தக் கோழியைப் போட்டான்.
இன்னும் சிறிது தூரம் நடந்தான். வழியில்
கிடந்த சிறு தொட்டியில் அவன்
கால் இடறியது. அந்தத் தொட்டியையும் எடுத்துசூ சாக்குப் பைக்குள்
போட்டுக்
கொண்டான்.
வழியில் மாடு ஆடுகளைக் கட்டும் தடி ஒன்று
கிடந்தது. குதிரையின் கால்
குளம்பு கிடந்தது. பல வளைவுகளை உடைய ஆட்டின் கொம்பு ஒன்று
கிடந்தது.
எல்லாவற்றையும் எடுத்துப் பைக்குள் போட்டுக்
கொண்டான். சாக்குப் பையைத்
தூக்கிக்கொண்டு மெல்ல நடந்து அரண்மனையை
அடைந்தான் அவன். காவலுக்கு இருந்த
வீரர்கள் கந்தல் ஆடையுடன் காட்சி அளித்த அவனைக் கண்டு
சிரித்தனர்.
|