|
புள்ளிமான் கதை
ஒரு காட்டில் இரண்டு புள்ளி
மான்கள் இருந்தன. பார்ப்பதற்கு இரண்டும் ஒரே
மாதிரியாக இருக்கும். இணை
பிரியாத நண்பர்களாக இருந்தன. சேர்ந்தே
சாப்பிடும். எங்கு சென்றாலும்
சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை
பெய்தது. மான்களால் விளையாட
முடியவில்லை. மழை நின்ற பிறகுதான் வெளியே
செல்ல முடிந்தது. இன்னும் மழை
பெய்யுமா என்று இரண்டு மான்களும் மேலே
பார்த்தன. அப்போதுதான்
மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது
சூரியன்.
அப் போது மான்கள் இரண்டும் சூரியனைப்
பார்த்து,""சூரியனே,
இன்னும் மழை
வருமா?''
என்று கேட்டன. அதற்கு சூரியன்,
""அதுதான்
நானே வந்துவிட்டேனே,
இனி எப்படி மழை வரும்?''
என்றது.
பிறகு,
சூரியன் மான்களைப் பார்த்து சிரித்தது.
ஒரு மான் கேட்டது,
""எங்களைப்
பார்த்து ஏன் சிரிக்கிறாய் சூரியனே?''
""நீங்கள்
இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்!
அதுதான் எனக்குச்
சிரிப்பு வந்துவிட்டது! தவறாக
எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள்
யார்?''
""நாங்கள்
தான் அழகான இரண்டு புள்ளி மான்கள். நாங்கள்
இருவரும்
நண்பர்கள்.
நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகத்தான்
இருப்போம்''
என்றன
புள்ளி மான்கள்.
சூரியன் கேட்டது: ""மிகவும் நல்லது!
உங்களில் யார் திறமை மிக்கவர்கள்?''
""நாங்கள்
இருவருமே திறமையானவர்கள்தான்!''
புள்ளி மான்கள் சிரித்தபடியே
கூறின.
சூரியன் சற்று யோசித்தது. பிறகு சொன்னது:
""சரி,
அப்படியென்றால் நான் ஒரு
போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம்
இருக்கிறது பாருங்கள். நீங்கள்
இருவரும் ஓடிப்போய் அந்த மரத்தைத்
தொடுங்கள். யார் முதலில்
தொடுகிறார்களோ அவர்கள்தான் திறமையானவர்கள்.
இந்தப்போட்டியில் வெற்றி
பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன்.''
சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு
மான்களும் உடனடியாக
ஓடத்தொடங்கின. மான்கள் மரத்தை நெருங்கின.
ஆனால் மரத்தைத் தொடாமல்
அப்படியே நின்றுகொண்டிருந்தன.
சூரியன் கேட்டது: ""ஏன் மரத்தைத் தொடாமல்
அப்படியே
நின்றுகொண்டிருக்கிறீர்கள்?''
""நான்
என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்''
என்றது ஒரு
புள்ளிமான். இன்னொரு புள்ளிமானும்,
""நானும்
என் நண்பனுக்கு
விட்டுக்கொடுத்துவிட்டேன்''
என்று சொன்னது.
இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தது
சூரியன். அது சொன்னது:
""அழ
கான இரண்டு புள்ளி மான்களே! உங்கள்
ஒற்றுமையைப் பார்த்து நான்
பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள்
இருவரும் கடைசிவரை இப்படியே
இருக்கவேண்டும். உங்களுக்கு நான் ஒரு
வானவில்லை பரிசாகத் தருகிறேன்.
நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ
அப்போதெல்லாம் "வானவில்லே வருக'
என்று சொன்னால் போதும். அப்போது வானத்தில்
அழகான வானவில் ஒன்று
தோன்றும். நீங்கள் அதைப் பார்த்து
ரசிக்கலாம்.''
பிறகு சூரியன் விடைபெற்றுப் போனது. மான்கள்
இரண்டும்
சந்தோஷமடைந்தன.
அவற்றிற்கு விருப்பமான நேரத்தில்
வானவில்லை அழைக்கும். வானத்தில்
தோன்றும் அற்புதமான வானவில்லைப்
பார்த்துப் பார்த்து ரசிக்கும்.
|