|

தொழில் நேர்மை
அண்ணன் ஓர் ஏழை வியாபாரி. மண் பாண்டங்கள்
செய்து விற்பதுதான் அவர் தொழில். அவர் தன்
தொழிலையே தெய்வமாக மதித்தார்.
ராஜேஷ் என்பவனும் அதே ஊரிலேயே மண்பாண்டங்கள்
செய்து விற்று வந்தான். அவன்
மண் பாண்டங்களில் கலப்படம் செய்தான். உடையாத
உலோகப் பாத்திரத்தின்
உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கெட்டியாக
மண்ணைத் தடவி மண் பாண்டம்போலச்
செய்வான் ராஜேஷ். அதை மக்களிடம் காட்டி,
""இதோ
பாருங்கள்,
இந்தப்
பாத்திரத்தைக் கீழே போட்டால் உடையாது!''
என்று சொல்லிக் கீழே போடுவான்.
அந்தப் பாத்திரம் உடையாது.
மக்களும்,
""என்ன
இது,
இந்த மண்பாத்திரம் கீழே போட்டாலும்
உடையவில்லையே!
அதிசயம்தான்!''
என்று வியந்து அந்தப் பாத்திரங்களை வாங்கிச் சென்றனர்.
ராஜேஷ் தன் பாத்திரங்களை,
உலோகப் பாத்திரங்களின் விலையைவிடவும் மிக
அதிகமான
விலைக்கு விற்றான்.
கண்ணன்,
ராஜேஷைக் கண்டித்தார்: ""நீ இப்படிச் செய்வது
தவறு. ஒன்று நீ
உண்மையான மண் பாத்திரங்களைச் செய்து விற்பனை
செய். இல்லையென்றால் உடையாத
உலோகப் பாத்திரங்களை விற்பனை செய்.
இப்படி மண்பாண்டம் என்று சொல்லி,
உலோகப் பாத்திரத்தை மக்களிடம் விற்காதே!
மண்பாத்திரங்களில் சமைப்பது நல்லது என்பதாலும்,
மண் பாத்திரம் உடையாததாக
இருந்தால் பல காலம் பயன்படுமே என்ற எண்ணத்தின்
காரணத்தாலும்தான் மக்கள் உன்
பாத்திரத்தை நம்பி வாங்கிச் செல்கிறார்கள். நீ
அவர்களை ஏமாற்றாதே!''
ஆனால் ராஜேஷ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ""நான்
மக்களின் மனம் கவர்ந்தவன்.
நான் பணக்காரன் ஆவது உனக்குப் பிடிக்கவில்லை.
அதனால்தான் நீ இவ்வாறு
கூறுகிறாய்!''
என்றான்.
இருவரும் பேசிக்கொள்வதை கோகுல் என்னும் மாணவன்
கேட்க நேர்ந்தது. அவனும்
ராஜேஷிடம் அவன் செய்யும் தப்பைச்
சுட்டிக்காட்டிப் பேசினான். அவன்
சொன்னதையும் ராஜேஷ் கேட்கவில்லை. பிறகு தனியாக
கோகுல்,
கண்ணனிடம் கேட்டான்:
""நீங்கள்
ஏன் ராஜேஷைப்போல பாத்திரங்கள் தயாரித்து
விற்கக்
கூடாது?''
கண்ணன் சொன்னார்: ""நான் செய்யும் தொழிலை
மிகவும் மதிக்கிறேன். தொழிலில் முறைகேடு
செய்வது கடவுளையே அவமதிப்பதுபோலாகும்.''
கண்ணனின் நியாயத்தை ஏற்றுக்கொண்டான் கோகுல்.
ராஜேஷின் ஏமாற்று வேலையை
மக்களுக்கு வெளிப்படுத்துவது எப்படி என்று
சிந்தித்தான். அவனுக்கு ஒரு
யோசனை வந்தது. அதன்படியே அவன் இரவு நேரத்தில்
ராஜேஷின் வீட்டிற்குச்
சென்றான். ராஜேஷின் வீட்டில் எல்லோரும்
உறங்கிவிட்டிருந்தார்கள்.
கொல்லைப் புறத்தில் ராஜேஷ் செய்திருந்த
பாத்திரங்கள் காய்ந்துகொண்டிருந்தன.
கோகுல் அந்தப் பாத்திரங்களை எடுத்து நெடுநேரம்
தண்ணீரில் ஊறவைத்தான். அந்த
உலோகப் பாத்திரங்களின் உள்ளும் புறமும்
கெட்டியாக ஒட்டிப் பிடித்திருந்த
மண் முழுதும் கரைந்து விட்டது. பிறகு கோகுல்,
பாத்திரங்களை வெளியே எடுத்து,
அவற்றின் உட்பக்கமும் வெளிப் பக்கமும் லேசாக
மண்பூசி உலர வைத்துவிட்டுப்
புறப்பட்டான். விடிவதற்குள் அந்த மண் படலம்
காய்ந்துவிட்டது.
மறுநாள் எப்போதும்போல ராஜேஷ் தன் பாத்திரங்களை
எடுத்துக்கொண்டு சந்தைக்கு
வந்தான். மக்கள் கூடியிருந்த இடத்தில் தன்
பாத்திரங்களின் சிறப்பைப்
பற்றிச் சொன்னான். மக்கள் நம்புவதற்காக ஒரு
பாத்திரத்தை மேலே தூக்கிப்
போட்டுக் காண்பித்தான். ஆனால்,
அந்தப் பாத்திரம் தரையில் விழுந்து ஏற்பட்ட
சத்தம்,
உலோகப் பாத்திரம் விழுந்த ஒலியைப்போலவே
இருந்தது. உடனே அந்தப்
பாத்திரங்களை பரிசோதித்துப் பார்த்த மக்கள்,
எல்லாம் உலோகப்
பாத்திரங்கள்தான் என்று கண்டுகொண்டனர்.
உடனே ராஜேஷ் தன் குற்றத்தை ஏற்றுக்கொண்டான்.
மக்கள் அவனைக் காவல் துறையிடம்
ஒப்படைத்தனர். அவனிடம் முன்னர் தாங்கள்
பாத்திரங்கள் வாங்கி ஏமாந்த
பணத்தைப் பெற்றுக்கொண்டனர். சிறைபட்ட ராஜேஷ் தன் நிலையை
எண்ணி மிகவும்
வருந்தினான்
|