|

நல்ல நண்பன் கதை
ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான்.
அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை
கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன்
அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ
எப்போதெல்லாம்
கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த
சுவற்றில் அடிக்கவும்
என்றான்,
இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல்
நாள் அவன்
35
ஆணிகளை
அடித்தான்,
மறு நாள்
30
என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில
நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி
விட்டான். அதணால் அவன் ஆணிகளை
அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து
பெருமை பட்டான். அவனை முழுவதுமாக
திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை
பிடுங்க சொன்னான்.
இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த
அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.
என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா
வேலைகளையும் செய்தாய். இப்போது நீ
அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால்
ஆணி அடித்த இடங்களில் உள்ள
ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த
மாதிரி இல்லை. எல்லா
இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ
கோபத்தில் சொல்லும்
வார்த்தைகளும்,
செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ
என்னதான் உன்
செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு
மாறாது,
மறையாது. நீ
வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும்,
செயல்காளால் உன்டாக்கும்
வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
என் நண்பனே,
உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய
பொக்கிஷங்கள்.
அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன்
வாழ்க்கையில் நீ உயர தட்டிக்
கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து
கேட்ப்பார்கள். நீ நல்ல
நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள்.
அதையும் இதைய பூர்வமாக
செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,
என்னை மன்னித்து விடு,
நான் உன்னில் ஏதாவது வடுவை உன்டாக்கி
இருந்தால்.
|