|

பேராசை
திருவெண்ணெய் நல்லுõரில்
பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன்
எந்த
பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும்
என நினைப்பான். எனவே,
நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே
மறைந்து போய்
பேராசைக்காரனாயிற்று.
ஒரு நாள்—
வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில்
சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.
வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து
கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை
கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது.
வண்டியை விட்டு இறங்கிய அவன்
அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு
பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதைக்
கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத்
தொடங்கினான்.
கிணற்றுக்குள் இருந்து "யார் இங்கே தண்ணீர்
எடுப்பது?'
என்ற பயங்கரமான குரல் கேட்டது.
அஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப்
பார்த்தான். உள்ளே யாரும்
இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில்,
""ஐயா!
நான் ஒரு ஏழை. தண்ணீர்
குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்?''
என்று கேட்டான்.
""விரும்பியதை
எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப்
பாதுகாக்கும்
பூதம் நான். யார் கண்ணுக்கும் நான்
தெரியமாட்டேன்,''
என்றது அந்தக் குரல்.
""மந்திரக்கிணறா!
விரும்பியதை எல்லாம் தருமா?''
என்று வியப்புடன் கேட்டான் அவன்.
""உன்னிடம்
பொற்காசுகள் உள்ளதா?
ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு
உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது
நிறைவேறும். நன்றாக நினைவு
வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு
உன் எண்ணத்தை நிறைவேற்றும்,''
என்றது அந்தக் குரல்.
"என்னதான்
நடக்கிறது பார்ப்போமே'
என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசை
கிணற்றுக்குள் போட்டான். ""விலை உயர்ந்த
நகைகளாலும் பொற்காசுகளாலும் என்
வண்டி நிரம்ப வேண்டும்...''
என்றான் அவன்.
ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும்
நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து
வியப்படைந்தான் அவன்.
""ஆ!
ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. இந்த
நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான்
தான்,''
என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே
வண்டியில் அமர்ந்தான்.
"ஐயோ!
காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே! வழியில்
திருடர்கள் இருப்பார்களே...
அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும்
கைப்பற்றிக் கொள்வார்களே! என்ன
செய்வது?'
என்று சிந்தித்தான்.
நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.
கிணற்றருகே வந்த அவன் தன்னிடம் இருந்த
இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.
""உனக்கு
என்ன வேண்டும்?''
என்று உள்ளிருந்து குரல் கேட்டது.
""வண்டியில்
இருக்கும் நகைகளும் பொற்காசுகளும் என்
கண்களுக்கு மட்டும்
தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக்
கூடாது,''
என்று கேட்டான்.
""அப்படியே
ஆகட்டும்,''
என்று குரல் வந்தது.
வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில்
திருடர்கள் சிலர் வந்தனர்.
அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும்
பொற்காசுகளும் தெரியவில்லை.
தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான்
பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன்
வீட்டை அடைந்தான்.
வீட்டுக்குள் ஓடினான். ""இனி நாமோ நம்
பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம்.
அரசனைப் போலச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
வண்டியில் விலை உயர்ந்த
பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்!''
என்று மகிழ்ச்சியுடன்
சொன்னான்.
வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி
திகைத்தாள். ""என்னங்க!
வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச்
சொன்னீர்கள். எந்தப்
பொருளும் இல்லையே,''
என்றாள்.
அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான
பொற்காசுகளும் நகைகளும் இருப்பது
தெரிந்தது. மனைவியைப் பார்த்து,
""வண்டியை
நன்றாகப் பார்,''
என்றான்.
நன்றாகப் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன்
என்றாள்.
அப்பொழுதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம்
வரம் எவ்வளவு தவறானது என்று
புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக்
கூறினான். கிடைத்த விலை மதிப்பற்ற
பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி
வருத்தம் அடைந்த அவன் வண்டியை
ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டிற்குச்
சென்றான்.
அந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை;
ஒன்றும் இல்லை. பைத்தியம்
பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான்.
அதிலிருந்து நகைகளும்,
பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின.
என்ன பிரயோஜனம். அவை இவன் கண்களுக்கு மட்டுமே
தெரிந்தன. தன்னுடைய பேராசை
குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து
மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.
|