|
தமிழின்
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக்
கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு
பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ்
நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள்
உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை
எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து
கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு
நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது
முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு
கிடைத்துள்ளன.
தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப்
பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப்
பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும்
வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக்
காப்பியத்தின் கருப்பொருளாகும்.
Home |